Thursday, 21 April 2011

வழக்கு ஒன்று தீர்ப்புகள் பலவிதம்.., மன்னித்துவிடு மாணவனே, இது எங்கள் ஜனநாயக நாடு....


வழக்கு

1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாணவர் நாவரசு, சீனியர் ஜான்டேவிட்டால் ராக்கிங் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யபட்டார்.


தீர்ப்பு-1

1998-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்பு-2

1998-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஜான்டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு-3

2011-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடலுர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

ச்ச நீதிமன்றத்திற்க்கு மேல் வேறு ஏதாவது நீதிமன்றங்கள் மிச்சமிருந்தால் இந்த தீர்ப்பு இனியும் மாற்றப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

Wednesday, 20 April 2011

புரட்சி நாயகர்கள்.....!

புரட்சி தலைவரே..!
புரட்சி தலைவியே..!
புரட்சி தளபதி..!
புரட்சி கலைஞரே..!
புரட்சி தமிழன்..! என்று தமிழில் புரட்சி என்ற வார்த்தை எந்த அளவு கொச்சைபடுத்த முடியுமோ அந்த அளவு கொச்சைபடுத்த பட்டு கேலி செய்யப்பட்டு இப்வெல்லாம் "புரட்சி தமிழன்" என்ற வார்த்தைக்கும் "நாய் சேகர்" என்ற வார்த்தைக்கும் அதிக வித்தியசத்தை உணர முடியவில்லை.


Thursday, 14 April 2011

வருசையில் நிற்க மறுத்த பருப்புகள்!

'கியூ'வில் நின்று ஓட்டு போட சொன்னதால் நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு.



Tuesday, 22 March 2011

திசை இல்லா பயணங்கள்...,

 
ருநாள் நன்பர் ஒருவரை சந்திக்க அவர் தங்கியிருந்த இடம் செல்ல நேர்ந்தது, அவர் தங்கியிருந்தது அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு ஸ்டுடியோ அப்பார்ட்மென்ட்.  துபாய், சார்ஜா போன்ற இடங்களில் வாடகை என்ற பெயரில் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட நேரம் அது. அந்த காலகட்டங்களில் அவர் தங்கியிருந்த இடத்திற்க்கு வாடகை கொடுக்கபட வேண்டுமானால் குறைந்தது 25,000 ஆயிரம் திரகமாவது கொடுக்க வேண்டும் ஆனால் நன்பருக்கு அவருடைய முதலாளி இலவசமாகவே அதுவும் தனியாக தங்க அனுமதியளித்து இருந்தார். இத்தனைக்கும் நான்பர் அவர் கம்பெனியில் டிரைவர்தான். நன்பர் வேறு ஒரு இடத்தில் டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது இவரின் சுறுசுறுப்பையும் வேலை என்று வந்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் செய்யக்கூடிய தன்மையையும் பார்த்து நன்பரின் தற்போதைய முதலாளி தான் ஒரு புதிய கம்பெனி தொடங்கிய போது இவரை வேலைக்கு சேர்ந்துக் கொண்டார், சரி இப்ப விசத்திற்க்கு வருவோம், நன்பாரை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது ஃபிளாட் ரொம்ப நல்ல இருக்கு இப்ப உள்ள வாடகைக்கு நாம பணம் கொடுத்து தங்கனும்னா சமாளிக்க முடியுமா? என்று கூறிகொண்டு வந்தபோது அதற்க்கு நம்ம நான்பர் சொன்ன பதில்.

Sunday, 20 March 2011

வளைகுடா இந்தியன்

அன்னியச் செலவானியை இந்தியவிற்க்கு ஈட்டிகொடுப்பதில் பெரும்பங்கு வளைகுடாவில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு உள்ளது. இவர்களில் பொரும்பாலும் கேரளா மற்றும் இந்தியாவின் மற்ற தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். 2005 வருடத்தின் கண்கெடுப்பின் படி ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்) மற்ற நாட்டவரையும் சேர்த்து உள்ள மக்கட்தொகையில் 40 சதவிகிதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

Friday, 18 February 2011

என் பதிவுகள் பிறந்தகதை....,

பிரபலமான இணைய இதழ்கள் சிலவற்றில் சந்தா செலுத்தி படித்து பொது அறிவைப் பெருக்கி கொள்ளும் புத்திசாலிகளில் நானும் ஒருவன்>

அனேகமாக எல்லா இணைய இதழ்களிலும் ஒரு செய்தியை பிரசுரித்து அக்கட்டுரையின் அடியிலேயே வாசகர்களின் கருத்தை பதியக்கூடிய வகையில் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இதில் பிரச்சனை என்னவென்றால் வாசகர்கள் பதிக்கும் அனைத்து கருத்துகளும் அப்படியே பிரசுரிக்கப் படுவதில்லை தனிக்கையாளரின் தனிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பிரசுரிக்க படுகிறது. இது ஒருவகையில் நல்ல ஏற்பாடுதான் என்றாலும் தனிக்கை என்ற பெயரில் தங்களுக்கு இணக்கமான கருத்துக்களை மட்டும் முழு சுதந்திரத்தோடு பதிய அனுமதிப்பது, எதிரான கருத்துக்களை பிரசுரிக்க மறுப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.