Saturday 7 April 2012

திரவியம் தேடுவோம்

வாழ்கையில் மிகவும் சாதாரன நிலையிலிருந்து உயர்ந்தவர்களை பார்க்கும் போது என் மனதில் தோன்றுவது 'எப்படி இவர்களால் முடிந்தது நம்மால் முடியாமல் போனது' என்கிற ஆதங்கம் சில நேரம் படிப்பிலும் மற்ற விசயங்களிலும் நம்மைவிட மிகவும் பின் தங்கியிருக்கிறார் ஆனால் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு எப்படி இவரால் மட்டும் முன்னேற முடிந்தது என்று பல சந்தர்ப்பங்களில் ஆதங்கப் பட்டிருக்கிறேன். இது கண்டிப்பாக அவர்களின் மீதுள்ள பொறாமையின் வெளிப்பாடு கிடையாது, என்னால் முடியவில்லையே என்ற இயலாமையின் வெளிப்பாடுதான்.