Thursday 21 April 2011

வழக்கு ஒன்று தீர்ப்புகள் பலவிதம்.., மன்னித்துவிடு மாணவனே, இது எங்கள் ஜனநாயக நாடு....


வழக்கு

1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் மாணவர் நாவரசு, சீனியர் ஜான்டேவிட்டால் ராக்கிங் என்ற பெயரில் கொடூரமாக கொலை செய்யபட்டார்.


தீர்ப்பு-1

1998-ம் ஆண்டு கடலூர் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதித்து தீர்ப்பு கூறியது.

தீர்ப்பு-2

1998-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி ஜான்டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு-3

2011-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடலுர் மாவட்ட நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

ச்ச நீதிமன்றத்திற்க்கு மேல் வேறு ஏதாவது நீதிமன்றங்கள் மிச்சமிருந்தால் இந்த தீர்ப்பு இனியும் மாற்றப்பட்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

Wednesday 20 April 2011

புரட்சி நாயகர்கள்.....!

புரட்சி தலைவரே..!
புரட்சி தலைவியே..!
புரட்சி தளபதி..!
புரட்சி கலைஞரே..!
புரட்சி தமிழன்..! என்று தமிழில் புரட்சி என்ற வார்த்தை எந்த அளவு கொச்சைபடுத்த முடியுமோ அந்த அளவு கொச்சைபடுத்த பட்டு கேலி செய்யப்பட்டு இப்வெல்லாம் "புரட்சி தமிழன்" என்ற வார்த்தைக்கும் "நாய் சேகர்" என்ற வார்த்தைக்கும் அதிக வித்தியசத்தை உணர முடியவில்லை.


Thursday 14 April 2011

வருசையில் நிற்க மறுத்த பருப்புகள்!

'கியூ'வில் நின்று ஓட்டு போட சொன்னதால் நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு.