Monday 26 March 2012

இந்த ஆண்டு இறுதிக்குள் துபாய் வாழ் வெளிநாட்டவார்களுக்கு ஓய்வூதிய திட்டம்

துபாய் வாழ் வெளிநாட்டவார்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற் காண சாத்தியகூறு ஆய்வுகள் முடிவடைந்து விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என்று துபாய் பொருறாதார அபிவிருத்தி துறை அறிவித்துள்ளது.

இத் திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் பயன்படும் வகையில் அமல்படுத்த பட உள்ளது.

பொருறாதார அபிவிருத்தி துறை, இத் திட்டம்  வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் குறிப்பாக பொருளாதார பிரச்சனைகள் (Graduatity) எனப்படும் இறுதியில் வழங்க வேண்டிய தொகையில் எற்படும் குளறுபடிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் சரியாக அமல்படுத்தப்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக இந்தியர்களுக்கும் மற்ற நட்டவர்களுக்கும் அதிலும் குறிப்பாக பதினைந்து இருபது ஆண்டுகள் கழித்துவிட்டு ஊர்போய் என்ன செய்வது என்ற கேள்வி குறியோடு திரும்பும் நிலை மாறி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவாவது மாத வருமாணம் உள்ளது என்ற நிலை ஏற்படலாம்.

எண்ணற்ற புதுமைகள் செய்து சாதனை படைத்துவரும் துபாய் வெளிநாட்டு தெழிளார்களின் பொருளாதார ஸ்திரமின்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்காக ஒரு ஓய்வூதியம் திட்டம் கொண்டு வந்து மற்ற அரபு நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக துபாய் திகழும் என்பதில் ஐயமில்லை.