Friday 18 February 2011

என் பதிவுகள் பிறந்தகதை....,

பிரபலமான இணைய இதழ்கள் சிலவற்றில் சந்தா செலுத்தி படித்து பொது அறிவைப் பெருக்கி கொள்ளும் புத்திசாலிகளில் நானும் ஒருவன்>

அனேகமாக எல்லா இணைய இதழ்களிலும் ஒரு செய்தியை பிரசுரித்து அக்கட்டுரையின் அடியிலேயே வாசகர்களின் கருத்தை பதியக்கூடிய வகையில் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்கள் இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான் இதில் பிரச்சனை என்னவென்றால் வாசகர்கள் பதிக்கும் அனைத்து கருத்துகளும் அப்படியே பிரசுரிக்கப் படுவதில்லை தனிக்கையாளரின் தனிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பிரசுரிக்க படுகிறது. இது ஒருவகையில் நல்ல ஏற்பாடுதான் என்றாலும் தனிக்கை என்ற பெயரில் தங்களுக்கு இணக்கமான கருத்துக்களை மட்டும் முழு சுதந்திரத்தோடு பதிய அனுமதிப்பது, எதிரான கருத்துக்களை பிரசுரிக்க மறுப்பதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.