Tuesday 22 March 2011

திசை இல்லா பயணங்கள்...,

 
ருநாள் நன்பர் ஒருவரை சந்திக்க அவர் தங்கியிருந்த இடம் செல்ல நேர்ந்தது, அவர் தங்கியிருந்தது அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு ஸ்டுடியோ அப்பார்ட்மென்ட்.  துபாய், சார்ஜா போன்ற இடங்களில் வாடகை என்ற பெயரில் எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட நேரம் அது. அந்த காலகட்டங்களில் அவர் தங்கியிருந்த இடத்திற்க்கு வாடகை கொடுக்கபட வேண்டுமானால் குறைந்தது 25,000 ஆயிரம் திரகமாவது கொடுக்க வேண்டும் ஆனால் நன்பருக்கு அவருடைய முதலாளி இலவசமாகவே அதுவும் தனியாக தங்க அனுமதியளித்து இருந்தார். இத்தனைக்கும் நான்பர் அவர் கம்பெனியில் டிரைவர்தான். நன்பர் வேறு ஒரு இடத்தில் டிரைவராக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது இவரின் சுறுசுறுப்பையும் வேலை என்று வந்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் செய்யக்கூடிய தன்மையையும் பார்த்து நன்பரின் தற்போதைய முதலாளி தான் ஒரு புதிய கம்பெனி தொடங்கிய போது இவரை வேலைக்கு சேர்ந்துக் கொண்டார், சரி இப்ப விசத்திற்க்கு வருவோம், நன்பாரை பார்த்துவிட்டு திரும்பி வரும்போது ஃபிளாட் ரொம்ப நல்ல இருக்கு இப்ப உள்ள வாடகைக்கு நாம பணம் கொடுத்து தங்கனும்னா சமாளிக்க முடியுமா? என்று கூறிகொண்டு வந்தபோது அதற்க்கு நம்ம நான்பர் சொன்ன பதில்.

Sunday 20 March 2011

வளைகுடா இந்தியன்

அன்னியச் செலவானியை இந்தியவிற்க்கு ஈட்டிகொடுப்பதில் பெரும்பங்கு வளைகுடாவில் வாழும் இந்திய தொழிலாளர்களுக்கு உள்ளது. இவர்களில் பொரும்பாலும் கேரளா மற்றும் இந்தியாவின் மற்ற தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். 2005 வருடத்தின் கண்கெடுப்பின் படி ஐக்கிய அரபு அமீரகத்தின் (துபாய்) மற்ற நாட்டவரையும் சேர்த்து உள்ள மக்கட்தொகையில் 40 சதவிகிதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.